டெல்லி: கருவுற்ற பெண்களுக்கு பணி இல்லை  உத்தரவை  எஸ்பிஐ வங்கி (SBI- State Bank of India) வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளது. வங்கியின் உத்தரவுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில்,  மூன்று மாத கர்ப்பிணி பெண்களுக்கு பணி இல்லை என்ற உத்தரவை திரும்பப்பெற்றது.

நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) தனது புதிதாக ஆட்சேர்ப்பு , பதவி உயர்வுகளுக்கான மருத்துவ உடற்தகுதி வழிகாட் டு தல்கள் குறித்து புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது. அதில், 3 மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்கள் பணிக்கு சேரும் தகுதி இருந்தாலும், அவர் தற்காலிகமாக தகுதியற்றவர்களாக கருதி,  பணி வழங்குவதை தவிர்க்க வேண்டும். குழந்தை பெற்ற பிறகு 4 மாதங்கள் பிறகு தான் அந்த பெண்ணுக்கு பணி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கியின் இந்த புதிய ஆணைக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் அதிருப்தி தெரிவித்து, இந்த வழிகாட்டுதலை திரும்ப பெற வேண்டும் என  வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் கமையான எதிர்ப்பு கிளம்பியது. வங்கியின் அறிவிப்பு, பாரபட்சமானது மற்றும் சட்டவிரோதமானது என கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து,  கருவுற்ற 3 மாத பெண் பணி நியமனத்திற்கு தகுதி அற்றவர் என்ற உத்தரவை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா திரும்பப்பெறுதாக அறிவித்து உள்ளது.  பொதுமக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை கைவிடவும், இந்த விஷயத்தில் ஏற்கனவே உள்ள வழிமுறைகளைத் தொடரவும் எஸ்பிஐ முடிவு செய்துள்ளது” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.