ராமநாதபுரம்

தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலக்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடிக்கடி எல்லாத்தாண்டி சென்று மீன்பிடித்ததாகத் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் வழக்கமாகி வருகிறது.  இதற்கு பல அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்த போதிலும் இந்த நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

இன்று, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இந்த கைது நடந்துள்ளது.

இலங்கை கடற்படையினர் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்து மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்ற விசாரணை நடத்தி வருகின்றனர்.