து அருந்தும் பழக்கமில்லாத ஸ்ரீதேவி உடலில் ஆல்கஹால் வந்தது எப்படி என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான  சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து, பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள அவர், ஆல்கஹால் கலந்த மதுவகைகளை அருந்தும் பழக்கமில்லாத ஸ்ரீதேவியின் உடலில் ஆல்கஹால் வந்தது எப்படி என்று கேட்டுள்ளார்.

ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டலின் சிசிடிவி பதிவுகளுக்கு என்ன நேரிட்டது?  ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார் என திடீரென மருத்துவர்கள் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

ஊடகங்களில் வெளியாகும் செய்திகளிலும் முரண்பாடுகள் இருக்கின்றன.

பாலிவுட் நடிகைகளுக்கும் தாவூத் இப்ராகிமிற்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

இதற்கிடையே ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஸ்ரீதேவியின் மரணம் கொலையாகக் கூட இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.