மாலே: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் மாலத்தீவில் இருந்து  தனியார் ஜெட் விமானத்தில் சிங்கப்பூர் சென்றார். மாலத்தீவில் மக்கள் எதிர்ப்பு காரணமாக, அவர் அங்கிருந்து இன்று புறப்பட்டு சென்றார்.

இலங்கையில் மக்கள் போராட்டம் காரணமாக, அங்கிருந்து தனது மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பி வந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கு தலைமறைவாக இருந்தார். ஆனால், அவரை திருப்பி அனுப்ப வேண்டும் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால், அவர் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவானது. இதையடுத்து அவர் இன்று மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ன்றார். நேற்று இரவே  தனது மனைவியுடன்  சிங்கப்பூர் சென்று இருக்க வேண்டியவர் விமானம் கிடைப்பது மற்றும் சிங்கப்பூர் அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, இன்று காலை தனியார் ஜெட் விமானத்தில் புறப்பட்டு சென்றார்.