லார்ட்ஸ்:
ந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த அணியில் அதிகப்டச்மாக மொயீன் அலி 47 ரன், டேவிட் வில்லே 41 ரன், ஜேனி பேர்ஸ்டோவ் 38 ரன் எடுத்தனர். இந்தியா சார்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டும், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 146 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 100 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடர் தற்போது 1-1என சமனில் உள்ளது. இறுதி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது.