கொழும்பு:
லங்கையில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஷ, நாட்டின் நலனைப் பாதுகாக்கவும் அத்தியாவசிய சேவைகளைப் பேணவும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.