கொழும்பு:

இலங்கையில் இந்தியப் பெருங்கடலை நோக்கி அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ளது. சீனா-&ஐரோப்பா இடையே துறைமுகங்கள், சாலைகளை இணைத்து பெல்ட் மற்றும் சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த துறைமுகம் முக்கிய அம்பாந்தோட்டை முக்கிய பங்காற்றும் என்று சீனா நம்பிக்கை கொண்டுள்ளது.

இதற்காக இந்த துறைமுகத்தை சீனா, இலங்கையிடம் இருந்து 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்க இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் நம் நாட்டு மதிப்பில் சுமார் ரூ.7 ஆயிரத்து 150 கோடியாகும்.

முதல் தவணையாக இலங்கையிடம் சீனா 300 மில்லியன் டாலர்ரை வழங்கியுள்ளது. இதையடுத்து அந்த துறைமுகத்தை சீனாவிடம் இலங்கை முறைப்படி நேற்று ஒப்படைத்தது. இதற்கான விழா நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது.

இதில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பேசுகையில், “இந்த ஒப்பந்தம்மூலம் சீனாவிடம் நாம் பெற்ற கடனை திருப்பி செலுத்த தொடங்கி விட்டோம். அங்கு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும். அங்கு தொழில் நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும். இது பொருளாதார வளர்ச்சிக்கும், சுற்றுலா மேம்பாட்டிற்கு உதவும்” என்றார்.

இந்த திட்டத்துக்காக இலங்கை தாராள வரிச்சலுகை வழங்கியதை எதிர்க்கட்சியினரும், தொழிற்சங்கங்களும் கடுமையான விமர்சித்துள்ளன. நாட்டின் சொத்துகளை சீனாவுக்கு விற்பனை செய்யும் செயல் என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளன.