துபாய்:

நடிகை ஸ்ரீதேவி மரணம் அடைந்த இடம், சாட்சிகளினம் துபாய் அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அங்கு இது தொடர்பாக ஸ்ரீதேவி கணவர் போனி கபூர், ஹோட்டல் ஊழியர்களிடம் துபாய் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இது வழக்கமான ஒரு நடைமுறை தான் என்று அபிஷேக் சென்குப்தா கலீஜ் டைமஸ் இதழுக்கு தெரிவித்துள்ளார். சட்ட நடைமுறைகள், விசாரணை முடிவடையாததால் ஸ்ரீதேவி உடல் உறவினர்களிடம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. அதனால் ஸ்ரீதேவி உடல் இன்று இந்தியாவுக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.