திருவண்ணாமலை

வுர்ணமி கிரிவலத்ஹ்டை முன்னிட்டு வரும் 28. 29 தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மிக தலங்களில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ஒன்றாகும். தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

அப்படி வரும் பக்தர்கள் இங்குள்ள மகாதீபமலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.

வருகிற சனிக்கிழமை ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளது.  எனவே அப்போது அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டும், விரைந்து தரிசனம் செய்வதற்கும் ஏதுவாக 2 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

பவுர்ணமி தினத்தன்று எந்தவித தரிசனத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் 28, 29ம் தேதிகளில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, வரும் 28ம் தேதி மாலை 6 மணிக்குச் சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் புறப்படுகிறது. அடுத்த நாள் மறுமார்க்கமாக இந்த ரயில் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.