டில்லி

டிசா ரயில் விபத்து எதிரொலியாகத் தென்கிழக்கு ரயில்வே பொது மேலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஒடிசாவின் பாலாசோரில், சென்னை நோக்கிச் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 291 பேர் உயிரிழந்தனர்  மேலும் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சுமார் ஒரு மாதங்களுக்கு முன்பு நட்ந்த இந்த பயங்கர விபத்தையொட்டி தென்கிழக்கு ரெயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் “தென்கிழக்கு ரெயில்வேயின் புதிய பொது மேலாளராக அனில் குமார் மிஸ்ராவை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.