ரடங்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் சிக்கி தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, தனது தகுதிக்கு அதிகமாகவே உதவிகளை செய்துள்ளார், இந்தி நடிகர் சோனு சூட்.

பண உதவி , பொருள் உதவி அளித்தும் , ஆயிரக்கணக்கானோரை பஸ் , ரயில்களில் சொந்த ஊருக்கும் அனுப்பியும் சோனு சூட், சேவை புரிந்துள்ளார்.
தொடர்ந்து அவருக்கு கோரிக்கை மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஒரு நாளைக்கு அவருக்கு வரும் மனுக்கள் விவரம் எவ்வளவு தெரியுமா?
தனது ட்விட்டர் பக்கத்தில் சோனுசூட் எழுதியுள்ள தகவல் இது:
1, 137- மெயில்கள்
19, 000- முகநூல் மெசேஜ்
4,812 –இன்ஸ்டாகிராம் மெசேஜ்
6,431- ட்விட்டர் மெசேஜ்
சராசரியாக எனக்கு வரும் கோரிக்கை மனுக்களை மேலே பட்டியலிட்டுள்ளேன். இத்தனை பேருக்கும் என்னால் உதவ முடியுமா?

எனினும் முடிந்த வரை உதவிகள் அளிக்கிறேன். உதவி கிடைக்காதவர்கள் தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள்’’ என்று உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், சோனுசூட்.

-பா.பாரதி.