லோயர் ஷபெல்லே:
சோமாலியாவில் குண்டுவெடிப்பு: 27 பேர் உயிரிழந்தனர்.

சோமாலியாவின் லோயர் ஷபெல்லே பகுதியில் உள்ள முரலே கிராமத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் பயங்கர வெடிகுண்டு வெடித்தது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்ததாகவும், 53 பேர் பலத்த காயமடைந்ததாகவும் குவாரேலி மாவட்ட துணை ஆணையர் அப்டி அகமது தெரிவித்தார். இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்று தெரிகிறது. பழைய மோட்டார் ஷெல்லுடன் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சோமாலியா தலைநகர் மொகதிசுவில் கடற்கரை உணவகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.