தசரா மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல்வேறு ஆஃபர்-களை அள்ளிவீசி வருகிறது.

இந்த ஆண்டுக்கான பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனை செப்டம்பர் 23 ம் தேதி துவங்கி நான்கு அல்லது ஐந்து வாரங்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டை ஒருத்தவரை இந்த ஆண்டு பொருட்கள் வரத்து 9 சதவீதம் சரிந்துள்ளது.

இருந்தபோதிலும், இந்த ஆண்டு ஸ்மார்ட்போன்-களின் விற்பனை 61000 கோடி ரூபாயை எட்டும் என்று கூறப்படுகிறது.

இதில், மூன்றில் ஒரு ஸ்மார்ட்போன் 5-ஜி தொழில்நுட்பத்துடன் கூடியதாக இருக்கும்.

இ-காமர்ஸ் நிறுவனங்களில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிக வியாபாரம் இருக்கும் என்று ஆன்லைன் விற்பனை குறித்து ஆய்வு செய்யும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இது கடந்த ஆண்டை விட 12 முதல் 15 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளனர்.