டில்லி:

த்தரகாண்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகேகாளில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று  இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

மாலை 4:50 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனால் கட்டடங்கள் குலுங்கியது. மக்கள் பீதியடைந்து வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.  சேத பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும்     வெளியாகவில்லை. கடந்த 11-ம் தேதி அன்று இதே பகுதியில்  நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.