கன்னூர்:

பாஜ பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா மாநிலம் கன்னூர் அந்தலூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். (வயது 53). பாஜ தொண்டர். இவர் கடந்த 18ம் தேதி இரவு 11 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த போது மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

கை, கால் உள்பட உடலில் 21 வெட்டுக் காயங்கள் இருந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த படுகொலைக்கு பின்னால் அரசியல் காரணம் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து மறுநாள் பாஜ பந்துக்கு அழைப்பு விடுத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 6 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் 25 வயது முதல் 31 வயது நிரம்பியவர்கள். இச்சம்பவம் பழிக்குபழியாக நடந்திருப்பது தெரியவந்தது. கம்யூ