சென்னை: சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு 3 ஆசிரியைகள் ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளியின் நிர்வாகி சிவசங்கர்பாபா மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து, அவர்மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறை, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இந்த புகார் தொட்ர்பாக, அந்த பள்ளியில் பணியாற்றிய 5 ஆசிரியைகளை விசாரணைக்கு வருமான சிபிசிஐடி காவல்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், 3 பேர் மட்டுமே இன்று விசாரணைக்கு ஆஜரான நிலையில், அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சூழலில், சிவசங்கர் பாபாவுக்கு உதவி செய்ததாக கூறப்படும் மற்ற 2 பள்ளி ஆசிரியைகள் வீட்டை பூட்டிவிட்டு தப்பியோடிய விட்டதாக கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel