சிதம்பரம்: இந்தியாவை உளவுபார்த்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம், ராகுல்காந்தி உள்படஇ முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மத்திய அமைச்சர் அஸ்வினி உள்பட பல தலைவர்கள், ஊடகத்தினர் என ஏராளமானோர்  செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெகாசஸ் விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி,  இந்தியாவை இஸ்ரேல் உளவுபார்த்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியறுத்தினார். மேலும், ஒட்டுகேட்பு தொடப்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.