டெல்லி: தலைநகர் டெல்லியில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிபதியின் அறை முன்பு இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

டெல்லி ரோகிணி கீழமை நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிபதியின்அறை 217க்கு முன்பு  இன்று காலை திடீர் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இன்றைய வழக்கு விசாரணைக்கு வந்த தாதா கோகி ரவுடிக்கும்பலை நோக்கி மற்றொரு ரவுடி கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது. இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே இருந்த முன்விரோதம் காரணமாக துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ரவுடி கோகி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்திய ரவுடி கும்பல்மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மேலும் 3 ரவுடிகள் உயிரிழந்துதாகவும், இதுவரை  4 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.