பீகார்: 
முன்னாள் மத்திய அமைச்சர் ஷரத் யாதவ் காலமானார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனாதாதள கட்சித் தலைவருமான ஷரத் யாதவ் தனது 75வது வயதில் நேற்று இரவு காலமானார். இதனை அவரது மகள் சுபாஷினி ஷரத் யாதவ் ட்விட்டரில் உறுதிப்படுத்தினார்.

முன்னாள் அமைச்சர் ஷரத் யாதவ் உடல்நிலை குறைபாடு காரணமாக குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளத்தின் முன்னாள் தலைவரான ஷரத் யாதவ், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1999-2004 மத்திய அமைச்சராக இருந்தார்.

நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, பின் லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியை துவக்கினார். வயது முதுமை காரணமாக உடல்நலக்குறைவால் அரியானாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.

ஷரத்யாதவ் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “முன்னாள் மத்திய அமைச்சராகவும், பல தசாப்தங்களாக சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும் நாட்டிற்கு சேவை செய்த யாதவ், சமத்துவ அரசியலை வலுப்படுத்தினார்” என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஷரத் யாதவ் சோசலிசத்தின் தலைவராக இருந்ததோடு, அடக்கமான குணமும் கொண்டவர். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.