தன் மீது எந்த தவறும் இல்லை என்றும், தன் மீது புகார் கூறிய  மனைவியை நன்றாக விசாரித்தால் அது புரியும் என்றும் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமி தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமி மீது அவரது மனைவி காவல்துறையில் புகார் அளித்தார். அதில் சமி, அவரது சகோதரர், உறவினர்கள் என அனைவரும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், கொலை முயற்சி செயததாகவும் புகார் தெரிவித்திருந்தார். அதோடு சமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும்  கூறியிருந்தார்.

இந்த புகார்கள் காரணமாக,  அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்நிலையில் என் மனைவியிடம் போலீஸ் உரிய முறையில் விசாரிக்க வேண்டும். அப்படி விசாரித்தால் உண்மை தெரியும்” என்று கூறியுள்ளார்.