டில்லி

டிகர் ஷாருக்கான் பிரதமர் மோடிக்கு இந்தியாவில் ஜி 20 மாநாடு வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜி-20 உச்சி மாநாட்டுக்கான இந்த ஆண்டு தலைமையை இந்தியா ஏற்று நடத்தியது. நேற்றும், இன்றும் டில்லியின் பாரத் மண்டபத்தில் உச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. முதல் நாளில் சர்வதேச விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதற்கான தீர்மானம் நிறைவேறி வரலாற்று ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன. பிறகு வந்திருந்த விருந்தினர்களுக்குப் பாரம்பரிய இசை கச்சேரியுடன் கூடிய, இரவு விருந்தும் வழங்கப்பட்டது.

இரண்டாம் நாளான இன்று ஜி-20 தலைமைத்துவம் பிரேசிலிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. உலக தலைவர்கள் செய்தியாளர்களிடம் இந்த மாநாட்டின் சிறப்புகளைப் பகிர்ந்து கொண்டனர். பிரதமர் மோடி சிறந்த பூமிக்காக ஜி-20 உச்சி மாநாட்டில் ஆக்கப்பூர்வ ஆலோசனைகள் நடைபெற்றன என, எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

நடிகர் ஷாருக்கான் இதனை டேக் செய்து,வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

“இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் வெற்றியடைந்ததற்காக மற்றும் உலக மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக, நாடுகள் இடையே ஒற்றுமையை வளர்த்தெடுத்ததற்காகவும் பிரதமர் மோடிக்கு என்னுடைய வாழ்த்துகள்”

ஒவ்வொரு, இந்தியரின் மனதிலும் கவுரவம் மற்றும் பெருமைக்கான உணர்வை அது கொண்டு வந்துள்ளது.  உங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ், நாங்கள் தனித்து வளம்பெறுவது மட்டுமின்றி ஒன்றாகவும் இருப்போம். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்காலம்.”.

என்று தெரிவித்துள்ளார்.