டில்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியா, பாரத் ஆகிய சொற்களில் எவ்வித பிரச்சினையும் இல்லை என தெரிவ்த்துள்ளார்.

மத்திய பாஜக அரசு இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்ற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் குடியரசுத் தலைவர்,, பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக “பாரத்” என அச்சிடப்பட்டது.

நடந்து முடிந்த ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களின் நாடுகளைக் குறிக்கும் வகையில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் முன் வைக்கப்பட்டிருந்த பலகையில் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக “பாரத்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், உலகளவில் “இந்தியா” என்பது “பாரத்” என மாற்றப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதம் தொடங்கியுள்ளது. இது பாஸ்போர்ட், தூதரகம், மின்அஞ்சல் போன்றவற்றில்  தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

“அரசியலமைப்பின்படி இந்தியா, பாரத் ஆகிய இரண்டு வார்த்தைகளுமே ஏற்றுக் கொள்ளக்கூடியவை என்பதால் இந்தியா, பாரத் என்ற இரண்டு சொல்லும் பயன்படுத்த படுகிறது.  எனக்கு இந்தியா, பாரத் ஆகிய சொற்களில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால்  எங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைத்துள்ளதால் பாஜக விறகு எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம்”

என்று தெரிவித்துள்ளார்.