சென்னை: சென்னையில் துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாதவரம் காவல்துறை ஆய்வாளர் கைது செய்யப்பட்டு உள்ளார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் பெண்கள் மீதான பாலியல் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல பள்ளி ஆசிரியர்கள் மீது மாணவிகள் புகார் கொடுத்து வரும் நிலையில், தற்போது, காவல்துறையினர் மீதும் புகார்கள் பதியப்பட்டு வருகின்றன. வேலிகளே பயிரை மேயும் அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
சென்னையில் மாதாவரம் காவல் நிலையத்தின், காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிறுமியின் தந்தைபுழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து எஸ்ஐ சதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்ஐ சதீணை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், எஸ்.ஐ சதீஷ்க்கு சிறுமியின் தாயான ரேவதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் காரணமாக தான் அவர் ரேவதியின் மகளுக்கு துப்பாக்கியை காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, சிறுமியின் தாய் ரேவதி மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் பெரியம்மா இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.