சென்னை

க்கள் நெரிசல் அதிகரிப்பதால் சென்னையில் மீண்டும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

File pic

இரண்டாம் அலை கொரோனா பரவலால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தமிழக அரசு கட்டுப்ப்பாடுகளில் சிறிது சிறிதாகத் தளர்வுகள் அறிவித்து வருகிறது.   ஆயினும் திரையரங்குகள், மதுபான கூடங்கள் உள்ளிட்டவை திறக்கப்படவில்லை.

தற்போது அனைத்துக் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன.  இங்கு கொரோனா கட்டுப்பாடு வ்ழிமுரைகள் பின்பற்ற வேண்டும் என அரசு கடுமையாக உத்தரவிட்டுள்ளது.  இருப்பினும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் சென்னை நகரில் குறிப்பாக திநக்ர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் மக்கள் நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.

இதையொட்டி கூட்டத்தைக் கட்டுப்படுத்த சென்னை மந்கராட்சி மற்றும் காவல்துறையினர் இணைந்து கண்காணிப்புக் குழுக்கள் அமைத்துள்ளனர்.    இந்த குழுக்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் பின்பற்றப்படுவதைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகள், வணிக வளாகங்கள், காய்கறி அங்காடிகள் மற்றும் இதர கடைகள் கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முக கவசம் மற்றும் கையுறை கட்டாயம் அணிந்து, சமூக இடைவெளியை பின் பற்ற வேண்டும். கைகழுவும் திரவம் கொண்டு அவ்வப்பொழுது கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும், 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் உணவகங்கள், வணிக வளாகங்கள், அங்காடிகள் செயல்படுகிறதா என, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.  பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு, ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம், உடல் வெப்பம் பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளின் வாயிலில் சானிடைசர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கடைக்கு நுழையும் முன், சானிடைசர் கொண்டு கைகழுவ வேண்டும். கண்காணிப்புக் குழுவின் ஆய்வின் போது, அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், தொற்று நோய் சட்டம், 1897பிரிவு, 2 கீழ், சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”

என வலியுறுத்தப்பட்டுள்ளது.