டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று மதியம் 2:25 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது.

நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.

அரை மணி நேர இடைவெளியில் இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, 2:25 மணிக்கு முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.9 ஆகவும் இரண்டாவதாக 2:51 மணிக்கு 6.2 ஆகவும் பதிவானது.

இந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் உணரப்பட்டதை அடுத்து மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.