டெல்லி:
ந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம்பெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 40,425 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,  பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவரும் நிலையில்,  நோய்த் தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.  மத்திய மாநில அரசுகள் தொற்று  பரவலைத் தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இருந்தால் தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகியே வருகின்றன. இதனால், சமூக தொற்றாக மாறுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி கூறியிருப்பில் கூறியிருப்பதாவது,
கடந்த 24 மணி நேரத்தில்  40,425 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,  ஓட்டுமொத்த கொரோனா பாதிப்பு 11,18,043 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 681 போ உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 27,497 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை நோய்தொற்று பாதிப்பில் இரந்து  7,00,087 போர் குணமடைந்துள்ளனர்.
தற்போதைய நிலையில்,  3,90,459 பேர் கொரோனாவுக்கு  சிகிச்சை பெற்று வருகின்றனா்.