சென்னை
தமிழக ஆளுநர் துணை வேந்தர்கள் மாநாட்டை கூட்டுவதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில்,
”உச்ச்சநீதிமன்ற தீர்ப்பில் ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருந்தது சட்டவிரோதம் என்று கூறியதால் சட்டவிரோத செயலை செய்த ஆளுநர் பதவி விலகி இருக்கவேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி அவர்கள் கூட்டுவது . அரசியலமைப்பை மதிக்காத செயலாகும். ஆளுநரின் அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறேன்”.
எனப் பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel