புதுடெல்லி: வாராக் கடன்களை நிர்வகிப்பதற்கென்று, தனியாக ஒரு வாராக்கடன் வங்கியை அமைப்பது என்பது தேவையானது மட்டுமல்ல; தவிர்க்க முடியாததும்கூட என்றுள்ளார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டி.சுப்பாராவ்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது; உலகில் திறமையாக வடிவமைக்கப்பட்டு, வெற்றிகரமாக இயங்கும் வாராக் கடன் வங்கிகள் பல இருக்கின்றன. உதாரணமாக, மலேஷியாவில் இருக்கும் டானஹர்த்தா வங்கியை சொல்லலாம்.

நம் நாட்டில் ஒரு வாராக்கடன் வங்கியை அமைப்பதற்கு, இந்த வங்கி நல்ல மாதிரியாக இருக்கும். வாராக் கடன் வங்கியின் முக்கிய நன்மை என்னவென்றால் ஊழல் இருக்காது. வட்டியிலும் தனிப்பட்ட ஆர்வங்கள் இருக்காது.

தற்போதைய திவால் சட்ட கட்டமைப்புகள் போதாது. கூடுதல் சுமையை அவற்றால் சமாளிக்க முடியாது. எனவே தனியாக வாராக் கடன் வங்கி அவசியம்” என்றுள்ளார் அவர்.

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்தபட்சம், 5% அளவுக்கு சரிவைக் காணும் என்ற பட்சத்தில், வாராக் கடன்கள் பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.