சென்னை

மிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு        மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

கடந்த ஜூன் 14 ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பிறகு உடல் நலம் தேறியதையடுத்து புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார்.அவருடைய நீதிமன்ற காவல் 12 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வரும் 15 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் சிறைக்காவலை நீட்டித்து நேற்று முன் தினம் உத்தரவிட்டது.

சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் 12 ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட சிறப்பு மருத்துவக் குழு, தேவையான சிகிச்சைகளை வழங்கி வந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை 6.30 மணிக்குச் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து புழல் சிறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து செல்லப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.