ண்டன்

ந்திய வம்சாவளி விஞ்ஞானி ரவீந்திர குப்தா ஒமிக்ரான் தொற்றால் நுரையீரல் செல்கள் பாதிப்பு அடைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என்று பல்வேறு உருமாற்றங்களை அடைந்து தொடர்ந்து இயல்பு நிலைக்குத் திரும்பவிடாமல் தாக்கி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் முதன்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளது.

ஒமிக்ரான் டெல்டா போன்று அதிக பாதிப்புகளை இந்த ஒமைக்ரான் ஏற்படுத்தாது என்று கூறப்பட்டாலும், தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு, ஒனுக்ரான் குறித்து எச்சரித்து வருகிறது. இந்நிலையில் ஒமைக்ரான் திரிபு லேசான பாதிப்பு கொண்டது அல்ல என்று இந்திய வம்சாவளி விஞ்ஞானி ரவீந்திர குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரவீந்திர குப்தா இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ நுண்ணுயிரியல் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் ஆவார்.  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ஆன இவர் ஒமிக்ரான் குறித்து, “ஒமிக்ரான் வைரஸ் கொஞ்சம் வலிமை குறைந்தது போன்று எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் சார்ஸ் வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் ஒருபோதும் மென்மையானதாக மாறப்போவதில்லை.

ஒரு வைரஸ் என்பது உருமாற்றம் அடையக் கூடியது. அவ்வாறு உருமாற்றம் அடையும்போது, அதன் பண்புகள் மாறலாம். அதைப்போல், உருமாறிய ரகமான ஒமிக்ரானும் வேகமாகப் பரவினாலும், லேசான பாதிப்பு கொண்டது கிடையாது. தற்போது வேண்டுமானால் வலிமை குறைந்தது போன்று தெரியுமே தவிர இப்படியே இருக்கும் என்று கூற முடியாது. ஒமிக்ரான் நுரையீரல் செல்களை பாதிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த ஒமிக்ரான் பரவலால் மேலும் சில புதிய வகை கொரோனா தோன்றும் வாய்ப்புகள் உள்ளன. புதிய வகை இன்னும் தீவிர தன்மை கொண்டதாக இருக்கும் அபாயம் உள்ளது. இந்திய மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உள்ளது என்றாலும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்” என எச்சரித்துள்ளார்.