சென்னை: மின்தடைக்கு ‘அணில்கள்’ காரணம் என்ற விமர்சனத்துக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பரவலாக மின்தடை ஏற்பட்டு வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உங்ளள நிலையில்,  மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாலும், முந்தைய ஆட்சியில் முறையான பராமரிப்பு இல்லததாலும் தமிழகம் முழுவதும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,  மின் தடைக்கு காரணம் அணில்கள் தான் என புதிய விளக்கத்தை அளித்துள்ளார் மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி. “மின் வழித் தடத்தில் செடி வளர்ந்து கம்பியோடு மோதும், அதில் அணில் வந்து ஓடும், கம்பி ஒன்றாகி பழுது ஏற்படும். இதனால் தான் மின் தடை ஏற்படுகிறது” என்று கூறியிருந்தார். இது கடுமையான விமர்சனங்களை எழுப்பியதுன், அமைச்சரின் நடவடிக்கையை குறித்து சமுக வலைதளங்களில் கலாய்யப்பட்டு வந்தது.  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் ஒப்பிட்டும் சமுக வலைதளங்களில் மீம்ஸ் வெளியானது.

இதுமட்டுமின்றி அரசியல் கட்சியினரும் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ், தனத டிவிட்டர் பக்கத்தில்  “மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி – விஞ்ஞானம்…. விஞ்ஞானம்! என கேலி செய்ததுடன்,  சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் செந்தில்பாலாஜி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில்,

கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை – அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட  சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன்.

அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் @drramadoss அவர்கள் தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம்!

அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்; தேடிப் படித்திருக்கலாம்!  பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது. களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள்.

எந்த சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரிதன்று! திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம்!

என தெரிவித்துள்ளார்.