சென்னை:
மிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு ஆண்டுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு வழங்குவதற்காக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட முகக்கவசங்களை திருப்பி அனுப்புமாறு பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிற நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தின் கண்டிப்பால், வரும் 15ந்தேதி அறிவிக்கப்பட்ட தேர்வுகளை தமிழகஅரசு ரத்து செய்தது. முன்னதாக, மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டபோது தலா 2 மாஸ்க்குகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்த நிலையில்,தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பள்ளிகளில் மீதமுள்ள முகக்கவசங்கள் மற்றும் உடல் வெப்பநிலையை அளவிடும் கருவிகளை உடனே கல்வித்துறையிடம்  திரும்ப ஒப்படைக்க மாவட்ட அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.