டில்லி

ச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க 9 பேரை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

நாடெங்கும் உள்ள உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதிகளை உச்சநீதிமன்ற கொலிஜியம் தேர்வு செய்வது வழக்கமாகும்.  இந்த கொலிஜியம் தேர்வு செய்வோரை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நீதிபதிகளாக நியமிப்பது வழக்கமாகும்.

அவ்வகையில் நேற்று உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டம் நடந்தது.  இதில் 9 பேரை நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்யப்பட்டது.  இது குறித்து எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில்  ஊடகங்கள் யார் யார் தேர்வு செய்யப்பட்டனர் என ஒரு பட்டியலை வெளியிட்டது.

அதிகாரப் பூர்வ அறிக்கை இல்லாமல் இவ்வாறு பெயர்களை வெளியிட்ட ஊடகங்களைத் தலைமை நீதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.  இன்று உச்சநீதிமன்றம் 9 பேரின் பெயர்களை வெளியிட்டுள்ளது.  இதில் 8 பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆவார்கள்.  ஒருவர் மூத்த வழக்கறிஞர் ஆவார்.

 

அவர்கள்

  1. கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ எஸ் ஓகா
  2. குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத்
  3. சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே கே மகேஸ்வரி
  4. தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி
  5. கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி பி வி நாகரத்னா
  6. கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி சி டி ரவி குமார்
  7. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம் எம் சந்தேஷ்
  8. குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பாலா எம் திரிவேதி
  9. மூத்த வழக்கறிஞர் பி எஸ் நரசிம்ஹா

ஆகியோர் ஆவார்கள்