டில்லி:

கஸ்டு 1ந்தேதி முதல் ஆன்லைன் பணப் பரிமாற்ற கட்டணம் ரத்து செய்யப்படு வதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக எஸ்.பி.ஐ. (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) உள்ளது.  வங்கியின் அறிவிப்பின்படி,  எஸ்.பி.ஐ. வங்கியில் நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 6 கோடி பேர் இருப்பதாகவும், மொபைல் பேங்க் சர்வீஸை 1.41 கோடி பேர் பயன்படுத்தி வங்கி பரிவர்த்தனைகள் செய்து வருவதாகவும் கூறி உள்ளனர். மேலும்,   எஸ்.பி.ஐ வங்கியின் மார்க்கெட் பங்குகள் 18% மொபைல் பேங்கிங் மூலம் நடைபெறுகிறது என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT), உடனடி கட்டண சேவை (IMPS) மற்றும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் நிகழ்நேர மொத்த தொகை செலுத்தல் (RTGS) ஆகியவற்றின் சேவைக் கட்டணத்தை ரத்து செய்வதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எஸ்.பி.ஐ.யின் டிஜிட்டல் செயலியான யோனோ (YONO) மூலம் வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்றம் செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளது.