புதுடெல்லி:
கோவா ஆளுநர் சத்யா பால் மாலிக்கை மேகாலயாவுக்கு மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோவா மாநில ஆளுநராக உள்ள சத்ய பால் மாலிக் மேகாலயாவுக்கு இட மாற்றம் செய்யப்பட்டு அம்மாநில ஆளுநராக நியமிக்கப்படுகிறார்.

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தன்னுடைய பணிகளுக்கு இடையே கோவா மாநில ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். அவர்கள் பதவி ஏற்கும் நாளில் இருந்து இந்த உத்தரவு செல்லுபடியாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.