பெங்களூரு:

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவரை சந்திக்க பரோல் கேட்டு சிறைத்துறை டி.ஜி.பி.க்கு மனு கொடுத்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவால் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது கணவர் நடராஜன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க அனுமதி கோரி கர்நாடகா சிறைத்துறை டி.ஜி.பி.யிடம் சசிகலா மனு கொடுத்துள்ளார்.

சசிகலா மனு டி.ஜி.பி. ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒப்புதல் அளித்தால் உடனடியாக சசிகலா சென்னை வருவார் என கூறப்படுகிறது.

ஏற்கனவே சிறைத் துறையில் நடந்த விதிமீறல்கள் காரணமாக சசிகலாவுக்கு பரோல் வழங்க சிறை நிர்வாகம் மறுத்தாலும், நீதிமன்றம் மூலம் பரோல் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

அதனால், நடராஜனை பார்க்க சசிகலா நிச்சயம் வருவார் என்றே சட்டத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.