நடிகை சரண்யா சசிக்கு சில வருடங்களுக்கு முன்பு மூளையில் கட்டி ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுவரை 11 அறுவை சிகிச்சை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் சரண்யா சசிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கடந்த மே மாதம் 23-ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சரண்யா சசி உயிரிழந்துள்ளார்.

மோகன்லாலின் சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார் சரண்யா சசி . மேலும் தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்துள்ளார் . இதைத்தவிர தமிழ், மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

https://www.facebook.com/PinarayiVijayan/posts/4307061512718979

நடிகை சரண்யா சசியின் மரணம் மிகுந்த வலியை ஏற்படுத்துவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். புற்றுநோயை எதிர்கொண்ட தன்னம்பிக்கையை விட்டுக்கொடுக்காத சரண்யாவின் வாழ்க்கை சமூகத்திற்கு நம்பிக்கை மற்றும் உத்வேகத்தை அளிக்கிறது என்று முதல்வர் கூறியுள்ளார்.