டில்லி:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி   “சங்கல் பத்ரா” என்ற பெயரில்  பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.  தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.

இன்னும் ஒரு வாரத்தில்  நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில்,  பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு விட்டன. ஆனால், பாஜக மட்டும் தேர்தல் அறிக்கைஎ வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்தது.

இந்த நிலையில், இன்று பாஜக தனத தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கைக்கு சங்கல் பத்ரா என்று பெயரிட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் மகக்ளை கவரும் வகையில் வெளியிடப்பட்டு உள்ளன.