சனிபகவான் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 2020 டிசம்பர் 27ஆம் தேதி தனுசு ராசியிலிருந்து தனது சொந்த வீடான 10ஆம் வீட்டிற்கு அதாவது மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகி பலம் பெறுகிறார். இவர் இரண்டரை ஆண்டுகள் இந்த ராசியில் இருப்பார்.

இந்த சனிப்பெயர்ச்சியால மிக அதிக நன்மையடையப்போகிறவர்கள், ரிஷபம் (ஏனெனில் பாக்கியாதிபதி பலம் பெறுகிறார் மற்றும் அஷ்டம சனி விலகுகிறார்), விருச்சிகம் (ஏனெனில் ஏழரைச் சனியிலிருந்து விடுபடுகிறார்கள்), கன்னி (ஏனெனில் அர்த்தாஷ்டம சனியிலிருந்து விடுபடுகிறார்கள்), சிம்மம் (ஏனெனில் சனி மறைவிடத்தில் அமரகிறார்), மீனம் (ஏனெனில் லாபஸ்தானத்துக்கு வருகிறார்).

சற்று ஜாக்கிரதையாய் இருந்து பரிகாரங்களை கவனத்துடன் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் மிதுனம் (ஏனெனில் அஷ்டம சனி), துலாம் (ஏனெனில் அர்தாஷ்டம சனி), மகரம் (ஏனெனில் ஜென்மசனி), கும்பம் (புதிதாக ஏழரைச்சனி துவங்கவிருக்கிறது).

சனிபகவான் நீதிமான் என்பதை நீங்க அறிவீங்க. சனியினால் சங்கடம் ஏற்படுமோ என்று  யாரும் பயப்பட வேண்டாம். அவர் எல்லோருக்குமே தண்டனை தர மாட்டார்.  தவறு செய்பவர்களை மட்டுமே தண்டிப்பார். சிலருக்கு அனுபவப் படிப்பினைகளை கொடுத்து செம்மைப்படுத்தி வாழ்வில் உயர்த்துவார் சனிபகவான்.

மேலும் தற்சமயம் நடக்கக் கூடிய தசாபுக்தி மற்றும் அந்தரம் அனைத்து கிரகங்களின் கோட்சார நிலை ஆகியவற்றைப் பொறுத்து பலன்கள் மாறுபடும் என்பதால் பயப்பட தேவையில்லை. சனி ஆட்சி பலம் பெறுவதால், உழைப்போருக்கு உயர்வு ஏற்படும்.  அந்நிய மொழி பேசும் நாடுகளில் உள்ளோர் அதிக நற்பலன் பெறுவர். இரும்பு, எண்ணை, வாகனங்கள் போன்ற துறைகள் வளம் பெறும். ஊழியம் செய்வோரும் உழைப்போரும் உயர்வு  பெறுவர்.

சனி ஆட்சி பலம் பெறுவதால், உழைப்போருக்கு உயர்வு ஏற்படும்.  அந்நிய மொழி பேசும் நாடுகளில் உள்ளோர் அதிக நற்பலன் பெறுவர். இரும்பு, எண்ணை, வாகனங்கள் போன்ற துறைகள் வளம் பெறும். ஊழியம் செய்வோரும் உழைப்போரும் உயர்வு  பெறுவர்.

சனி பகவானுக்கான பரிகாரங்கள் (பிரீதிகள்) : எள் தீபம் ஏற்றுதல், காகத்துக்கு தினமும் சாதம் வைத்தல். இரும்பு விளக்கில் நல்லெண்ணை ஊற்றி விளக்கேற்றுதல், கருப்பு நாய்க்கு உணவு படைத்தல், ஏழை எளியோருக்கு உணவு அளித்தல், நீல நிறப் பொருட்கள் மற்றும் உடைகளை தானம் செய்தல், எள்ளால் செய்த இனிப்பு விநியோகம் செய்தல், திருநள்ளாறு, குச்சனூர் சென்று வழிபடுதல், சனிக்கிழமைதோரும் அனுமனுக்கு விளக்கேற்றி, அர்ச்சனை செய்து மாலை சாற்றி வெள்ளை சாற்றி வழிபடுதல் அனுமான் சாலீசா சொல்லுதல் ஆகியவை சிறந்த சனிப்ரீதிகள் ஆகும்.

மேஷம்

அசுவினி: பணம் என்றால் என்ன, அதை எப்படிச் சம்பாதிப்பது, வந்த பணத்தை எப்படித் தக்கவைத்துக் கொள்வது போன்ற விஷயங்களைச் சரியானபடி அறிந்துகொள்வீங்க. பதவி/ சம்பள உயர்வு உண்டாகும். வேலைச் சுமை அதிகமாகத்தான் இருக்கும். முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுவீங்க. சில பணிகளைப் போராடி முடிப்பீங்க. மேலதிகாரி ஹெல்ப் செய்வாரு.

பரணி: கணவன் – மனைவிக்கு இடையில் இருந்த வீண் சந்தேகம், பிணக்குகள் நீங்கிடுங்க. தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். அவருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கிடுங்க. பிதுர்வழிச் சொத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். இழந்த பணத்தைத் திரும்பப் பெறுவீங்க. வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெறுவீங்க..

கார்த்திகை, 1ம் பாதம்: குழந்தை இல்லாமல் வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சேமிக்கத் தொடங்குவீங்க. பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும்.வழக்கு களில் வெற்றி உண்டாகும். முக்கிய கோப்புகளைக் கவனமாகக் கையாளவும். திடீர் இடமாற்றம் உண்டாகும். அதனால் நன்மையே ஏற்படும். புது சலுகைகளும் சம்பள உயர்வும் உண்டு.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4:. புதிய வியூகங்களால் எதிலும் சாதிப்பீங்க. நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த வேலைகளை எளிதாக முடிப்பீங்க. குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீங்க. சுயதொழில் செய்வோருக்குப் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு சீராக இருந்து வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கி நல்ல கல்வி பயில வாய்ப்பு அமையும். போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி வாய்ப்பும் நல்ல வேலை உத்தியோகமும் அமைய வாய்ப்பு ஏற்படும்.

ரோகிணி: வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும். சிலர் வீட்டை விரிவுபடுத்துவீங்க. பகை வர்களும் நண்பர்கள் ஆவாங்க. நோய் பாதிப்புகள் விலகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். வேலையில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றம், வெளியூர் மாற்றம், மாற்றத்தினால் உண்டாகும் பதவி உயர்வு போன்றவை உண்டாகும். நிறைய உழைப்பீங்க. உழைப்புக்கு ஏற்ற நல்ல ஊதியம் பெறுவீங்க.

மிருகசீரிடம் 1,2: அடகில் இருந்த நகைகளை மீட்பீங்க. எனினும், தந்தைக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கிடுங்க. பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு மாற்றங்களுடன்கூடிய நல்லவிதமான திருப்பங்கள் இருக்கும். அரசுத் துறையினருக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை எதிர்பார்த்தபடி கிடைக்கும். எனினும், தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம், 3,4: 8-ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல் படவேண்டிய காலம் இது. மற்றவர்களை நம்பி ஏமாறவேண்டாம். குடும்பத்தில் சிலர் பிரச்னையை உண்டாக்க முயல்வாங்க. கவனம் தேவை. எனினும் சாதுர்யமாகப் பேசி சிரமங்களிலிருந்து விடுபட்டு நிம்மதியடைவீங்க.  எதிர்பார்த்த பணம் வரும். தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை கற்பனையாக சந்தேகப்படுவீங்க. வேற்றுமொழியினரால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

திருவாதிரை: மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். முக்கிய பத்திரங் களில் கையெழுத்து போடுமுன், சட்ட நிபுணரை ஆலோசித்து முடிவெடுக்கவும். பூர்வீகச் சொத்துப் பங்கைப் போராடித்தான் பெற வேண்டி இருக்கும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு உங்களுக்கு லாபமோ லாபம்தான். செய்யும் தொழிலில் வருமானம் கூடும். வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும்.

புனர்பூசம், 1,2,3: செலவுகள் அதிகரிக்கும். சொத்து வாங்குவது விற்பதில் வில்லங்கம் ஏற்பட்டு நீங்கிடுங்க. திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். உடல் நலனை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் அதிக பொறுப்புகள் உங்கள் தோள் மீது சுமத்தப்படும். எதையும் எளிதாக எடுத்துக்கொண்டால் பாரம் கண்ணுக்குத் தெரியாது. எத்தனை உழைக்கிறீர்களோ அவ்வளவு லாபம் உண்டு.

நாளை… கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான பலன்கள்