மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி பகுதியில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக என்டிடிவியின் அறிக்கையின்படி, சந்தேஷ்காலி வழக்கில் தொடர்புடைய ஒரு பெண் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.

மேலும், பாரதிய ஜனதா கட்சியினர் வெற்று காகிதங்களில் கையெழுத்திடவும், கற்பழிப்பு புகார் அளிக்கவும் தன்னை வற்புறுத்தியதாக அந்த பெண் கூறியதை அடுத்து இதில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.