லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹரன்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தின் சஹரன்பூரில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொள்வதாக அறிவித்திருந்தார்.

இந் நிலையில் சஹரன்பூரில் ஏப்ரல் 5ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்  முன் எச்சரிக்கை நடவடிக்கை,  சட்டம் ஒழுங்கு காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு வழக்கமான நடவடிக்கையே என்றும் அவர் கூறி உள்ளார். ஆனாலும் சஹரன்பூர் மகா பஞ்சாயத்தில் திட்டமிட்டபடி கலந்து கொள்ள போவதாக பிரியங்கா காந்தி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.