பரிமலை

நேற்று சபரிமலை ஐயப்பன் கோவில் சித்திரை மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் சபரிமலையில் நடை திறந்து பூஜை, வழிபாடுகள் நடைபெறும். மண்டல மகரவிளக்கு சீசன், பங்குனி உத்திரம் திருவிழா நாட்கள் , விஷு, ஓணம் பண்டிகை உட்பட விசேச நாட்களில், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது..

நேற்று மாலை 5 மணிக்குச் சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையைத் திறந்து வைக்க வழக்கம் போல் பக்தர்களின் தரிசனத்திற்குப் பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இன்று அதிகாலை 5 மணி முதல் வழக்கமான பூஜைகளுடன், 18-ந் தேதி வரை 8 நாட்கள் நெய்யபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம் உட்பட சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.  ஏப்ரல் 14 ஆம் தேதி விஷு பண்டிகை நாளில் சிறப்புப் பூஜை வழிபாடுகள் அதிகாலை 3 மணி முதல் நடைபெறும்.

அன்று சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்குத் தந்திரி, மேல் சாந்தி ஆகியோர் நாணயங்களை கை நீட்டமாக வழங்குவார்கள். மேலும் சன்னிதானத்தில் கனி காணல் சடங்குகளும் நடைபெறும்.  இதைத் தொடர்ந்து 18 ஆம் தேதி வரை சபரிமலையில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவிற்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

 ப்க்தர்கள் வசதிக்காக  சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு  கேரள அரசின் சிறப்பு பேருந்துகள், பத்தனம்திட்டா, கோட்டயம், செங்கன்னூர், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உட்பட முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட உள்ள்து.