பரிமலை

ரும் 17 ஆம் தேதி அன்று ஐப்பசி மாத பூஜைக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது 

தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களில்  சபரிமலை ஐயப்பன் கோவிலில் ம் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடைபெறும். வருகிற 17-ந் தேதி ஐப்பசி மாத பூஜைக்காகச் சபரிமலை கோவிலில்  மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி தீபாராதனை காட்டுகிறார்.

வரும் 18-ந் தேதி முதல் 5 நாட்கள் அதிகாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். 22-ந் தேதி அத்தாழ பூஜைக்குப் பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்குக் கோவில் நடை அடைக்கப்படும்.

 சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காகக் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள அரசின் சிறப்பு பேருந்துகள் சபரிமலைக்கு இயக்கப்படுகிறது. மேலும் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தற்போது  இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.தற்காலிக  முன்பதிவு மையம்  நிலக்கல் பகுதியில்  17-ந் தேதி முதல் செயல்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.