டில்லி:

பரிமலையில் பெண்களுக்கு தடை விதிக்க வகையில் செய்யும் தனி நபர் மசோதாவை  கேரள எம்பி இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார்.

பாரம்பரியம் மிக்க சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றம், பல நூறாண்டுகளாக கடைபிடித்து வரும்  பாரம்பரியத்தை உடைத்து, அனைத்து வயதுடைய பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது.

இதன் காரணமாக கேரளாவில் போராட்டம் வெடித்தது. ஆனால், பல பெண்ணியக்கவாதிகள், தீர்ப்பை காரணம் காட்டி கோவிலுக்கு செல்ல முயன்றதால் பிரச்சினை உருவானது.பெண்களை சபரிமலைக்கு செல்ல விடாமல் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி போராடியதால், தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில், சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களை அனுமதிக்க தடை விதிக்க வகை செய்யும் தனி நபர் மசோதாவை  இன்று  பாராளுமன்றத்தில்  கேரளாவைவின் கொல்லம் தொகுதியில் வெற்றி பெற்ற  புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி எம்பி பிரேமச்சந்திரன்  இன்று தனி சபர் மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.

அதில், சபரிமலை விவகாரத்தில் 2018, செப்டம்பர் 1-ம் தேதிக்குள் முன்பிருந்த நிலை தொடரவேண்டும் என மசோதாவில் குறிப்பிட்டுள்ளார்.