டினிப்ரோ

க்ரைன் நாட்டில் மருத்துவமனையில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் பதற்றம் நிலவுகிறது.

போரில் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டினிப்ரோ நகரத்தில் உள்ள மருத்துவமனையின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது டிவிட்டர் பக்கத்தில் விடியோவை பகிர்ந்துள்ளார்.

“ஒரு தீய அரசு மட்டுமே மருத்துவமனைக்கு எதிராகப் போராட முடியும். இதில் ராணுவ நோக்கம் இருக்க முடியாது. இது சுத்தமான பயங்கரவாதம். ரஷ்யா தனது சொந்த விருப்பத்தில் தீமையின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது, மேலும் அது இந்த பாதையைக் கைவிடாது. பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க வேண்டும்”

என்று அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவின் இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.