மும்பை: ரஷியா உக்ரைன் போரால் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும்,  உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் நடைபெற்ற வருடாந்திர ஆசிய பொருளாதார கலந்துரையாடல் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டர். அப்போது நாட்டின் தற்போதைய நிலை, வளர்ச்சி, உலக பொருளாதாரம், உக்ரைன் போர் குறித்து விவாதிக்கப் பட்டன.

இந்த கூட்டத்தில் பேசிய நிர்மலா சீத்தாராமன், உலகில் தற்போது ஏற்பட்டுள்ள  புதிய சவால்கள் (உக்ரைன் போர்) உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இது மட்டுமின்றி, இந்தியாவின் வளர்ச்சிக்கு சவாலாக உருவெடுக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும்  என அஞ்சப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவது, இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உலக அமைதியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றவர், இது, இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பொருளாதார மீட்சி “கடுமையாக தடைபடும்” என்றும்,  உலக நாடுகளிடையே ஒற்றுமை, அமைதி அவசியம் என்று வலியுறுத்தியதுடன், விரைவில் ஏதேனும் ஒருவகையில் அமைதி திரும்பும் என்று நம்புகிறோம். எந்த இடையூறும் இல்லாமல் இருந்தால்தான், உலக பொருளாதாரம் மீள்வது நிலையானதாக இருக்கும் தற்போதைய போர்  நிகழ்வுகளால் இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பொருளாதாரம் மீண்டு வருவது கடுமையாக பாதிக்கப்படும் என்று அச்சம் தெரிவித்ததுடன், மனிதகுலத்தின் நலனுக்காக, எந்த இடையூறுகளையும் சந்திக்காமல் நிலையானதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.