சென்னை:
தந்தி பரப்பியவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய பீகாரை சேர்ந்த யூடியூபர் மணிஷ் காஷ்யப் கடந்த 30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து 3 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டு கடந்த 3ம் தேதி நீதிபதி இல்லத்தில் மணிஷ் காஷ்யப் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது பீகாரை சேர்ந்த யூடியூபர் மனீஷ் காஷ்யப்பை மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதில் மனீஷ் காஷ்யப் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தராததால் 7 நாள் போலீஸ் காவல் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், வதந்தி பரப்பிய மனீஷ் காஷ்யப் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.