தைபே

ன்று நடந்த தைவான் நாட்டின் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

தைவான் நாடு கிழக்கு ஆசியாவில் பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு ஆகும்  .தைவான் சீனாவுக்கு அருகே அமைந்துள்ளது.  இந்நாட்டை தனிநாடாக சீனா அங்கீகரிக்காமல் அது தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறி வருகிறது.

தைவானில் 4 ஆண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம் ஆகும்.  இன்று அங்கு அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது.

இந்த தேர்தலில் அந்நாட்டின் ஆட்சியில் உள்ள ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் லை சிங் டி அதிபர் வேட்பாளராக களமிறங்கினார்.  அவரை எதிர்த்து சீனா ஆதரவு பெற்ற தேசியவாத கட்சியைச் சேர்ந்த ஹவ் யொ-ஹி அதிபர் வேட்பாளராக களமிறங்கினார்.  மேலும்  தைவான் மக்கள் கட்சியை சேர்ந்த கோ வென் ஜி என்பவரும் வேட்பாளராக களமிறங்கினார்.

இன்று காலை 8 மணிக்கு அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. தைவான் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்றே எண்ணப்பட்டன.

அதிக அளவில் வாக்குகளைப் பெற்ற ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வெற்றிபெற்று மூன்றாம் முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது. ஆளும் கட்சியின் அதிபர் வேட்பாளர் லை சிங் டி அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

எனவே, லை சிங் டி தைவானின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்  தற்போது  தைவான் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லை சிங் டி சீன எதிர்ப்பு கொள்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.