டில்லி

விவசாய மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியதால் ராஜ்யசபா டிவி குரலை மியூட்செய்து ஒளிபரப்பியது.

 

பாஜக அரசு தாக்கல் செய்துள்ள விவசாய மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எதிர்ப்புகளுக்கு இடையே இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர்.

ஆயினும் அதை ஆளும் கட்சி பொருட்படுத்தவில்லை.

மாநிலங்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் ராஜ்யசபா டிவி இதனால் எதிர்க்கட்சியினர் குரலை மியூட் செய்து காட்சிகளை மட்டும் ஒளிபரப்பியது.