வாஷிங்டன்

நேற்று ஏற்பட்ட முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் முடக்கத்தால் ரூ.25000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2004 இல் அமெரிக்காவை மையமாகக் கொண்டு மார்க் ஜுக்கர்பர்க் என்பவர் தனது நண்பர்களுடன் முகநூலைத் தொடங்கினார். உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்குக் கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளமாக முகநூல் முன்னணியில் உள்ளது.

மெட்டா எனும் நிறுவனத்தின் கீழ் முகநூல் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவை தற்போது இயங்கி வருகின்றன. மார்க் ஜுக்கர்பர்க் இவற்றை நிர்வகித்து வருகிறார். உலகெங்கும் நேற்றி ஒரு மணி நேரத்திற்கும் மேல் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு சமூக வலைத்தளங்களும் முடங்கின.

எனவே அவற்றைப் பயன்படுத்தும் பயனர்கள், கருத்து பரிமாற்றம் மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் உள்ளிட்ட அதன் அனைத்து சேவைகளையும் பெற முடியாமல் தவித்தனர். சுமார் ஒருல மணி நேரம் கடந்ததும் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.

இன்று அமெரிக்கப் பங்கு சந்தையில், மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்தது.  இதையொட்டி மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஜுக்கர்பர்க் ரூ.25 ஆயிரம் கோடி (3 பில்லியன்) இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.